வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

அவள்-17


















பெண்களெல்லாம் செத்தொழியுங்கள்
என்றான்  கடவுள்
 அவ்வண்ணமே ஆயிற்று
ஆண்கள் ஆண்களை புணர்ந்தார்கள்
பெண்களை மறுபடி தோற்றுவித்து
ஆண்களெல்லாம் செத்தொழியுங்கள் என்று
உத்தரவிட்டான் அவன்
அதுவும் அப்படியே ஆயிற்று
பெண்கள் பெண்களை புணர்ந்தார்கள்
கருமம் இருவருமே மொத்தமாக
செத்தொழியுங்கள் என்றான் அவன்
உலகம் சூன்யமாயி்ற்று
புதிய சந்ததி ஒன்றை படைப்பேன் என்று
சபதமிட்டவனிடம்
சாத்தான் கேட்டான்
பெண்ணின்றி ஏது?


கனிந்த கடவுள் சொன்னான்
கொஞ்ச நேரம் நான்
பெண்ணாகிவிடுகிறேன்
நீ ஆணாக இரு


பிறந்த குழந்தையின்
அடிவயிற்றுக்கு கீழே
ஒரு கொம்பு முளைத்திருந்தது
இருவருமே ஒப்புக்கொண்டார்கள்
அது ஆண் குறியென

0 கருத்துகள்:

கருத்துரையிடுக