உழுதுகொண்டிருப்பதாக முரசடிக்கிறாய்
களஞ்சியம் கொள்ளாமல்
அறுவடை தானியங்களென்கிறாய்
ஈரம் இறங்காத
பாறை பெருவெளியில்
உன்
ஏருக்கு வேலையில்லையென்பதை
அறியா குழந்தையல்ல நான்
மகசூலில் தெறித்த
பதர் ஒன்றையாவது
பார்வைக்கு வீசு
என்னிடமும் உண்டு
ஒரு துண்டு நிலம்
அது
அத்தனை கடினமானதுமல்ல
திங்கள், 8 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)