திங்கள், 8 பிப்ரவரி, 2010

நிலமின்றி உழுபவன்

உழுதுகொண்டிருப்பதாக முரசடிக்கிறாய்

களஞ்சியம் கொள்ளாமல்
அறுவடை தானியங்களென்கிறாய்

ஈரம் இறங்காத
பாறை பெருவெளியில்
உன்
ஏருக்கு வேலையில்லையென்பதை
அறியா குழந்தையல்ல நான்

மகசூலில் தெறித்த
பதர் ஒன்றையாவது
பார்வைக்கு வீசு

என்னிடமும் உண்டு
ஒரு துண்டு நிலம்
அது
அத்தனை கடினமானதுமல்ல