திங்கள், 28 நவம்பர், 2011

தண்டவாளத்து விழிகள்










 
பாழடைந்து கிடக்கிற
நிறுத்தமற்ற
இரயில் நிலையத்தில்
இற்று காலொடிந்த பின்னும்
யாருக்காகவோ காத்திருக்கிறது
ஒற்றை இருக்கை     

சனி, 26 நவம்பர், 2011

வெட்டுப்பட்ட ராணி




பணம் வந்த பாதையில் தேடினேன்
எங்கும் நீயில்லை
பணம் போன பாதையில் துழாவினேன்
அங்கும் நீயில்லை

சதியாட்டத்தால்
சதுரங்கத்தில் வெட்டுப்பட்ட
ராணி நீ

உன்னை சொல்லி குற்றமில்லை
பாஞ்சாலியிடம் கேட்டுவிட்டா
பணயம் வைத்தான் தர்மன்
சகுனியின் சபையில்

அதிர்ந்து பேச தெரியாத உன்னை
அரசியல் பூதம் விழுங்குவதை காண
இன்றிருந்திருந்தால் சுஜாதா
என்ன எழுதியிருப்பார்

போகட்டும் விடு
சிறையறை வாசம் இன்னுமொரு
கருவறை வாசமே