சனி, 3 நவம்பர், 2012

இணைய புலிகளுக்கும் ; மைக் மாவீரர்களுக்கும்.. ...


       








     .'சோதியா படையணி'யின் முன்னணி தளபதி. ஈழத்து பெரும் சமர்களிலெல்லாம் முன் நின்றவர். ஜான்சி ராணிக்கு இணையாக ஈழமெங்கும் பேசப்பட்ட பெண் போராளி ...இன்று பாலியல் தொழிலாளி .[விகடனில் அவரது பேட்டியிலிருந்து ]
      
            உங்களிடம் கருணை தேடியோ , பரிதாபம் ஈனவோ நான் இங்கு பேசவில்லை ..என் கண் முன்னால் உடல் சிதறி இறந்து போன இரண்டு வயது தம்பிக்காக போராளி ஆன  நான் , எனது குழந்தைகளுக்காக பாலியல் தொழிலாளி ஆனேன் .
   
        "  இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காக போராடுவதாக சொல்லும் எந்த தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை . ' ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம் ' , என்கிற நிர்வாண கசப்பான உண்மையை கூட இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் .எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை  உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து             ' எப்போது உங்கள் அடுத்த போராட்டம் ? ' என்று கேட்டால் ,விளக்கு மாறால் அடிப்பேன் .                                                                                                                                                                                   இந்தியத் தலைவர்களே உங்களை கை கூப்பி தொழுகிறேன் ..எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது  நிறுத்துங்கள்.