புதன், 3 அக்டோபர், 2012

ஜெயமோகனின் அறத்தை குறித்து ...







              

             ஜெயமோகனின் 'அறம்' வம்சியின் ஆக சிறந்த வெளியீடுகளில் ஒன்று .நினைவின் புகை மண்டலத்தில் ஒரு புள்ளியாக கூட இல்லாமல் மறைந்து போன ' பூமேடை ' உயிர்த்தெழுந்து வந்தார் . எத்தனையோ சீட பெருமான்கள் மின்னி மறைந்து விட்ட பின்னும் குமரி மக்களின் மனதில் நீங்காது நிலைத்திருக்கும் 'நேசமணியோடு' கைகுலுக்க முடிந்தது . வாழ்வின் அடித்தட்டு அழுத்தத்தால் நிலைகுலைந்து மன மண்ணிற்குள் புதைந்து போன எண்ணற்ற மனித முகங்களை அகழ்ந்து அகழ்ந்து அறம் மீட்டெடுத்து தருகிறது  .                                                                                                                                                                                         உண்மையான மனிதர்களை பதிவு செய்யும்போது புனைவை புகுத்துவதும் , பால்ய வியப்போடு அவர்களை விவரிப்பதும் முறையா என்பதை                 ஜெய மோகன் தான் விளக்கவேண்டும் .' யானை டாக்டர் .கே' சொல்கிறார்  " மனிதனின் பூச்சி கொல்லியோடு போரிடுவது ஒரு பூச்சியல்ல . அது ஒரு பூச்சி பெரு வெளி . அது எத்தகைய பூச்சி கொல்லியை யும் வென்று மேலெழும்பும் ". அறமும் அதுவே. மனித பெருக்கு விடமாக அலை சுழற்றி , கரை புரண்டு பாய்ந்தாலும் 'அறம் ' நீந்தி மேலேறும் . சூரியனும் சுற்றி வரும் கோள்களும் ஒன்றோடொன்று உரசாமல் இயங்குவதும் அறமே .
                            அறம் அண்ட பெருவெளி .