செத்துப்போன கரிய நதி ஒன்று
உறைந்துகிடக்கிறது என் வீட்டிற்குள்
நதியை பின்தொடர்ந்து உட்புகுந்த
குயில்களும் புறாக்களும்
குருவிகளும் வண்ணத்து பூச்சிகளும்
எதையும் தராமல்
எதையும் பெறாமல்
பின்திரும்பி வெளியேறுகிறார்கள்
இலையோ பூவோ
செத்த நதியில் நீராடி வருகிற அது
அவளாக இருக்கலாம்
தமிழ் திரைப்பட துறையில் இணை இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.வம்சி வெளியீடாக-தெங்கு-சிறுகதை தொகுப்பு,-நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து-கவிதை தொகுதி வெளியாகியிருக்கிறது.திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறேன்.