வெள்ளி, 22 அக்டோபர், 2010

ஒரு ஆரிய தாலிக்கு , ஒரு இலட்சம் திராவிட தாலி !!!


1991-மே :   ராஜீவ் காந்தி படுகொலைக்கான முழு பழியையும் சுமந்து தேர்தலில்
                      மரண அடி வாங்கியது  தி .மு.க. இன்றைய அல்கொய்தா வை விட
                     கொடூரமானதாக அன்று  தி .மு.க. சித்தரிக்கப்பட்டது .வார மலர்
                     பத்திரிகையில் அந்துமணி எழுதினார் , "இனி தி.மு.க.வும் ,தி.க.வை
                    போல வெறும் ஒரு சமூக இயக்கமாக மட்டுமே இருக்கும் "...
  
         இருக்கட்டும் .......

இடை செருகல் :{ சோனியா காந்தி அடிப்படையில் கிறிஸ்தவர் என்று
                                     அறியப்படுவதால் இதை எழுத நேரிடுகிறது }
        
           "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு "என்றார்  'இயேசு' .
              அவருக்கும் முன்னால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய 'பழைய விவிலியமோ'
             "பல்லுக்கு பல் ;கண்ணுக்கு கண் " என்கிறது .

             அதாவது ஒரு பல்லுக்கு ஒரு பல் தான் ;ஒரு கண்ணுக்கு ஒரு கண் தான் ...இரண்டு கூட இல்லை .

            விஷயத்திற்கு வருவோம் .......

2009-மே :          ஒரு தாலிக்காக ஒரு இலட்சம் தாலி அறுப்பேன்என்று                    சபதம் பூண்ட   ' மங்கம்மா' -சோனியா காந்தி -
          ஈழ தமிழினத்தையே வேரோடு கருவருத்தார் .

         அதற்கும் பழி சுமந்து நிற்பது தி.மு.க.வே தான் !!!

          தேவையா இந்த கூட்டணி ??????
         

வியாழன், 21 அக்டோபர், 2010

கண்ணகியும் - ஜெயலலிதாவும்


       "கண்ணகி நீதி கேட்ட இடத்தில் நீதி கேட்க வந்திருக்கிறேன் ".மதுரையில் நின்று கொண்டு இப்படி முழங்கியது யார்
 தெரியுமா ? 
வேறு யாருமல்ல ...சாட்சாத் ஜெய லலிதா தான் .
        இதே ஜெயலலிதா அவர்கள் தான் அவரது ஆட்சி காலத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் இருந்தா கண்ணகி சிலையை இடித்து பெயர்த்து ,சாக்கு மூட்டையில் கட்டி ,அருங் காட்சியகத்தின் கொடௌன் ற்குள் கடாசியவர். .
இதை தான் 'கால  கொடுமை 'என்றுசொல்வார்களோ.
அதற்காக சொல்லப்பட்ட காரணம் இன்னும் விநோதமானது .'
போக்குவரத்திற்கு இடைஞ்ச்சல் '.
      மெரினாவில் உழைப்பாளர் சிலை தொடங்கி காந்தி சிலை வரை வரிசையாக எண்ணற்ற தலைவர்களின் சிலைகள் இருக்கிறது .அன்று விசித்திரமாக கண்ணகி சிலை மட்டும் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஆக இருந்திருக்கிறது .
      கண்ணகி சிலை அகற்றபடுமுன்பு ஒரு லாரி வேறு வந்து மோதியது !அத்தனை சிலைகளையும் மீறி அந்த லாரிக்கு கண்ணகியின்
 கால் சிலம்பின் மீது அப்படி என்ன கோபமோ ?

ஆனால் உண்மையான காரணம் 'வாஸ்து தோஷம் '.
        மெரினாவில் வலது கையில் கால் சிலம்போடு  நின்று கொண்டிருந்த கண்ணகியின் இடது கை' போயஸ் கார்டனை '  சுட்டி கொண்டு நின்றதாம் .இத்தனைக்கும் மேரினாவிற்கும்  போயஸ் கார்டனுக்கும் ஐந்து கிலோ மீட்டர் தூரம்!!!
              வாஸ்த்து ,பூஜை புனஷ்காரம் ,ஜோசியம் ,இவைகள் தான் ஆட்சியை தீர்மானிக்கிறது என்றால் ,அரசியலுக்கு வந்த நாளிலிருந்து இவர் மட்டும் தானே ஆட்சி புரிந்திருக்க முடியும் ?
       எனக்கு தெரிந்து ஆட்சியை தீர்மானிப்பது 'வாக்கு சீட்டு 'கூட அல்ல .அரசை தீர்மானிப்பது 'மக்களின் மறதி ' தான்.
          அவர்கள் ஒரு ஆட்சியின் 'சாதகங்களை' அல்லது 'பாதகங்களை ' 
அல்லது வேறு எதற்காகவோ 'இரண்டையும்' சேர்த்து மறந்து விடுவதுதான் ஒரு அரசை தீர்மானிக்கிறது .