ஞாயிறு, 24 ஜூலை, 2011

குறி


 
 
 
 
 
 
 
 
கத்தியை
எப்படி பிடிப்பதென்று
கற்று கொடுத்தவன் நான்  
அவனது குறி எப்போதும்
எனது  கழுத்தாகவே இருந்தது  

கூடற்றவன்








































 இளவேனில்காலம் .....

நகர பிரதான சாலையோரத்தின்
வழக்கமான டாஸ்மாக் கடை ....

எதிரிலிருக்கும் மின்கம்பத்தில்
சுற்றியிருக்கும் கம்பியை
வெறியோடு கொத்தி கொத்தி
முறிக்கிறது காகம் ........

இன்னும் ஒரு ஈர்க்குச்சியை கூட
பொறுக்கவில்லை நான்

வியாழன், 21 ஜூலை, 2011

குறுஞ் செய்தி மடல்












"என்ன சேதி ?"

"ஒன்றுமில்லை"

"ஒன்றுமில்லாததற்கு ஏன் பதிலளிக்கிறாய் ?"

"ஒன்றுமில்லாத ஒன்றை குறித்து நீ ஏன்
கேள்வி எழுப்புகிறாய் ?"

"ஒன்றுமில்லாத ஒன்றிற்கு நீ பதிலளிக்கும்போது
ஒன்றுமில்லாத ஒன்றிற்கு நான் கேள்வி எழுப்பக்கூடாதா ?"

"அது சரி"

"வேறென்ன ?"

"ஒன்றுமில்லை ?"

"........................."

"என்ன மௌனம் ?" 

"ஒன்றுமில்லை என்பதை தவிர
வேறொன்றுமில்லை "