திங்கள், 15 ஆகஸ்ட், 2011

அவள்-21













மரவள்ளி  தோட்டத்திற்கிடையே 
கிடக்கிறதந்த
பெரும் நீராழி
எப்போது போனாலும்
குளித்துக்கொண்டேயிருப்பாள்
மாமனை தொலைத்த அத்தையவள்
ஊறிப்பெருகும் அலைகள்
கரைகளை அடித்துடைக்கும்
 என்னை படிக்க சொல்லி 
எல்லாம் முடிந்து கரையேறுவாள்
மீந்த நுரைகள்
உடைந்து சிதறும்
சோறு பரிமாறும் அவள் விரல்களில்
உற்று பார்க்கிற என்னை
கை கழுவ துரத்தி
மரியா முன் நிறுத்துவாள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக