சனி, 6 ஆகஸ்ட், 2011

அவள்-8












தொலைபேசி உரையாடலில்
கலவியில் எது பிடிக்குமென்றால்
கட்டியணைத்தல் மட்டுமே என்றாள்
இந்தபடி அந்தபடிஎன்று 
பலபடிகள் ஏறிய பேச்சின் உச்சியில்
பெண்ணொன்று ஆணிரண்டை
துய்க்க வேண்டுமென்றாள் ஒருமுறை

குறிப்பிட்ட நாளில்
அவள் வீட்டிற்குள்
இருவராய் உள் நுழைந்தபோது
'நீ மட்டும் வா ' என்றாள்    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக