திங்கள், 15 ஆகஸ்ட், 2011

அவள்-20















என்றும் மீளாத
அனந்த சயனத்திலிருக்கும்
பத்மநாப சுவாமியின் அணிகலன்களில்
பிறர் பார்வை விழுந்து தீட்டாயிற்று
அழியப்போகிறது நாடென்று
' தேவ பிரசன்னம் ' குறித்திருக்கிறீர்கள்
அரிவை தெரிவை பேதை பெதும்பை
மங்கை மடந்தை
பேரிளம்பெண் என
மொத்த எம் மூதாதையரின்
மேலாடை உரித்து
அத்தனை முலைகளையும்
உண்டு களித்த உங்களுக்காக
எப்போதோ தேவ பிரசன்னம்
பார்த்துவிட்டார்கள்
எப்போதும் விழித்திருக்கும்
எங்கள் அவள்கள்     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக