செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பால் வீதியிலொரு பட்டம்

வானில்
இருள் ஊறத்துவங்குகிற வேளையில்
பட்டங்கள்
தரையிறங்கிக்கொண்டிருக்கின்றன
இன்றைய பறத்தலின்
சுகத்தையும் வலியையும் ருசித்தபடி..

அறுபட்டவை
காற்றின் திசையில் மிதந்து
மரக்கிளைகளிலோ
மின்கம்பங்களிலோ
தொற்றி  சடசடக்கின்றன

ஏதோவொரு கரத்தால் விடுபட்டு
நாளையும் பறக்கலாமென்ற
காத்திருப்போடு சிலதும்
சாவின் அருகாமை உணர்ந்த
படபடப்போடு பலதும்

விரல்களால் ஆட்டுவிக்கப்படுகிற
விபரீதம் வெறுத்து
தன்னை தானே
அறுத்துக்கொண்ட ஒன்று
அண்டவெளியெங்கும் அலைகிறது
புகலிடமற்று

1 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

விரல்களால் ஆட்டுவிக்கப்படுகிற
விபரீதம் வெறுத்து
தன்னை தானே
அறுத்துக்கொண்ட ஒன்று
அண்டவெளியெங்கும் அலைகிறது
///

அருமை நண்பரே!!

கருத்துரையிடுக