வெள்ளி, 16 ஏப்ரல், 2010

காமத்தாலானது உலகு

ஒவ்வொரு நாளும் புணர்ந்துகொண்டுதானிருக்கிறேன் - ஒரு பெண்ணோடு அல்லது மேலும் சிலரோடு.என்னோடு புணர்பவர்கள் அல்லது நான் பலவந்தப்படுத்தி புணர்பவர்கள் முன்னாள் காதலி,நடிகை,உறவு முறைக்குட்பட்டவர்கள், சிறு வயதிலிருந்தே தெரிந்தவர்கள்,இடைப்பட்ட காலத்தில் கடந்தவர்கள்,ஏன் -இப்பொதென்னை கடந்துபோனவர்களாகவும் இருக்கலாம் ( கொஞ்சம் அபாயகரமானதுதான் ).
       புணர்தல் நிகழுமிடம் எனது அறை,கழிப்பறை (?) வேலைக்கிடையில் கொஞ்சம் அயர்கிற இடம் எதுவாகவும் இருக்கலாம்.புணர்வு தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது மனதால் - உடலால் அல்ல. நான் கட்டை பிரம்மச்சாரியாக்கும் (?)
        இது கழிவிரக்கத்தை கோருவதற்காக எழுதப்படுவதுமல்ல.உங்கள் கழிவிரக்கத்தை போகிற போக்கில் இடது கையால் நீல் மெட்டல் பனால்காவில் தூக்கி போட்டுவிட்டு போங்கள்.
        ஒரு திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் ‘அண்ணே இதுதான் மேண்டிலா’ என்று கேட்டு பெட்றோமாக்ஸ் லைட்டை உடைப்பாரே,அதைப்போல இது ஏதோ எனக்கு மட்டுமே நேர்கிறதென்ற குற்றவுணர்ச்சியால் குறுகிப்போன கூமுட்டைத்தனத்தாலும் இதை எழுதவில்லை.
      “பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக” என்று பத்து கட்டளைகளில் ஒன்று சொல்கிறது ( அப்பவும் பிறர் புருசனைண்ணு சொல்லலியேப்பா )
      அவர்களுக்கென்ன...பத்திரிகை,தொலைக்காட்சி,சினிமா,செல்போண்,இணையம்,SEE THROW CLOTH,SIX PACK BODY ஏதுமில்லாத காலத்தில் எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டார்கள்.
                சரி விஷயத்துக்கு வருவோம்.
       ஆண் பெண்ணையோ,பெண் ஆணையோ அல்லது ஆணும் ஆணுமோ,பெண்ணும் பெண்ணுமோ ( ஸ்ஸோஓ... ) மனதால் புணர்வது
                     குற்றமா ? குற்றமில்லையா ?

3 கருத்துகள்:

மோனி சொன்னது…

குற்றமா ? குற்றமில்லையா ?????

நிகழ்காலத்தில்... சொன்னது…

தலைப்பே முடிவைச் சொல்லி விட்டதே :)

இயற்கையாக இயல்பாக இருப்போம்..

adhiran சொன்னது…

குற்றமில்லை ஜென்டில்மேன்.. கழுத .... நஷ்டம் யாருக்கு!

glad to know you have your own blog.
greets.

கருத்துரையிடுக