புதன், 28 ஏப்ரல், 2010

கற்களின் நாயகி

என்னை ஞாபகமிருக்கிறதா?

கணவனை கொன்றதற்காக
கைது செய்யப்பட்ட
கள்ள காதலியின்
கழுத்தில் சுற்றி கிடந்த
பிஞ்சு பெண் நான்

காராக்கிரஹ இருளில்
அவள் ஒளிந்துகொண்டதால்
என் மீது திரும்பின
அவளுக்கான கற்கள்

பாவம் என்னுடையதல்ல...

உடலெங்கும் உதிரம் கொட்ட
மலங்க மலங்க முழித்து
நின்றுகொண்டிருந்தவள்
கற்களுக்கான காரணம் புரிந்தபின்
மார்பில் வகிடெடுத்து பிளந்து
உடலை ஒரு கூடையாக்கினேன்

கூடை நிரம்பியபின்
உதட்டுச்சாயம் பூசி
ஒப்பனையிட்டு கிளம்பினேன்
கற்களுக்கு சொந்தமான
 ஒவ்வொருவனோடும்
கூடிப்புணர

ஏனெனில் பாவம் அவர்களுடையதுமல்ல...

அனுபவித்த,அனுபவிக்க
வாய்ப்பேயிராத சுகம் ஈந்து
உடல் பிரிந்து
காறி உமிழ்கிறேன்

இந்த எச்சில்
என் காலடியில்
விந்து வடிய வீழ்ந்து கிடக்கிற
நாயின் முகத்திற்கல்ல

என் தாயின் யோனிக்கு...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக