செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஆதி தாரம்

அவள் மரித்து
வெகு காலமாயிற்று..

உண்மையில் அவளை
கொன்றவன் நான்தான்

பிறன் மனையோடு
முதல் புணர்ச்சியுற்ற நாளில்
தன்னுடலை தீயிலிட்டாள்

நிசப்தம் உறைந்த இருளில்
ஆழ்ந்த உறக்கத்தில்
மின்னல் புன்னகை கீறி ஒளிய
உடலதிர்ந்து விழிக்கிறேன்

இடி இடித்து
மெல்ல தூறி
கொட்டி சொரிந்து
பெருகிப் பெய்து
ஊழி மழையாய் அவளது
அடங்கா சிரிப்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக