வெள்ளி, 22 ஜனவரி, 2010

குருதி கசிவு

இரவுகளில் வந்து
உறவாடுகிறேனென்று
எனது
கல்லறையின் சிலுவையை
உடைத்தெறிந்து
மாந்ரீகரித்த கூர் நீள ஆணியை
நெஞ்சுக்கு நேராக
அடித்து இறக்குகிறார்கள்...

ஜன்னல் கதவுகளை
இறுக தாழிட்டு
இருண்ட தனியறைக்குள்
அடைந்து கிடக்கும்
உன்
நெற்றியிலும் மார்பிலும்
இரத்தம் துளிர்ப்பதை
இவர்கள்
அறியாதவர்களாயிருக்கிறார்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக