வியாழன், 21 ஜனவரி, 2010

நாக்கு

வெப்பத்தின் உக்கிரத்தில்
கடல்கள்
கருகிய பின்னரே கருகியது
பூமியை புரட்டி
பாய்ந்துகொண்டிருந்த
எச்சில் நதி

விலக்கப்பட்ட கனிக்காக
முதல் பெண்ணான ஏவாளின்
உமிழ் நீர் சுரப்பிகளிருந்து
ஊற்றெடுத்து பெருகிய நதி

அழுகிக் குவிந்த
பிண மலைகளின் மீது
ஒற்றை போர்வையாய்
நீண்டு கிடக்கிறது
சர்ப்ப நாக்கு

சுவை உணர்ந்த நொடி முதல்
அசுர நீட்சியாய் நீண்டு
சுழலும் உருளையை
சுற்றி வளைத்த
நிறமற்ற நாக்கு

இனிப்பும்
கசப்பும்
புளிப்பும்
உவர்ப்புமான
ருசியின் வெறியில்
சுழன்று நக்கி
அலைந்து கொண்டிருந்தது அது

இன்னும் அதற்கு
கைகூடா கனவாகவே
கடவுளின் கை ருசி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக