திங்கள், 26 செப்டம்பர், 2011

அவள்-27









செத்துப்போன கரிய நதி ஒன்று
உறைந்துகிடக்கிறது என் வீட்டிற்குள்
நதியை பின்தொடர்ந்து உட்புகுந்த
குயில்களும் புறாக்களும்
குருவிகளும் வண்ணத்து பூச்சிகளும்
எதையும் தராமல்
எதையும் பெறாமல்
பின்திரும்பி வெளியேறுகிறார்கள்
இலையோ பூவோ
செத்த நதியில் நீராடி வருகிற அது
அவளாக இருக்கலாம்

1 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

நல்ல கவிதை..ஆனால் புரியவில்லை/

கருத்துரையிடுக