வெள்ளி, 24 செப்டம்பர், 2010

மரண தண்டனையும் - மனித உரிமையும்...

தர்மபுரியில் முன்று மாணவிகளை உயிரோடு எரித்து கொன்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் திரள்கிறார்கள் .


இந்த கொலைகார கும்பலுக்கு வேறு என்ன தண்டனை தான் கொடுப்பதாம் ??சிறை தண்டனையா ??ஹ ..ஹ் ..ஹ ..ஹா ..

வேணாம் விட்ருங்க அழுதிருவேன் .இந்தியா போன்ற ஊழல் மலிந்த நாட்டில் ,குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு மிகுந்த நாட்டில் சிறை தண்டனை என்பது கேலி கூத்து .

மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்தை கொளுத்தி முன்று பேரை உயிரோடு கொளுத்தியவர்கள் இங்கேவீதிகளில்நெஞ்சுநிமிர்த்தி ,ஹாய்யாக கைவீசி நடந்துகொண்டிருக்கிறார்கள் அடுத்த வேட்டை தேடி....அதே நேரத்தில் புலிகளுக்கு பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பதற்காக பேரறிவாளனுக்கு தூக்கு விதிக்கப்பட்டிருக்கிறது .

இங்கே பாதி குற்றவாளிகள் கொலை செய்தவுடன் நேராக செல்வது
காவல் நிலையங்களுக்குதான் . சரணடைந்து அப்படியே சிறைக்கு போய்விடலாம் .அதைவிட பாதுகாப்பு வேறு எங்கே இருக்கிறது ?!!

சினிமா பாணியில் போலீஸ் துரத்தி துரத்தி பிடித்தததாக மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வரும்..அது வேறு விஷயம் .

வெளியே இருந்தால் பாதிக்கப்பட்டவனின் மாமன் ,மச்சான் என்று கிளம்பி போட்டு தள்ளிவிட்டால் இந்தியாவிற்கு எவ்ளவு பெரிய இழப்பு ...

இங்கே குற்றவாளிகள் சிறைக்கு செல்வது பிக்னிக் போவதைப்போல ...சிறையில் அவர்களுக்கு பெண்ணை தவிர
[ அதையும் புதிய - இளம் குற்றவாளிகளிடம் அடைந்து விடுகிறார்கள் ] வேறு எல்லாமும் கிடைக்கிறது .சிறையில் இருந்தபடியே
அவர்களது செங்கோல் கோலோச்சுகிறது .

என்கௌன்டர் ,மரண தன்டனை இந்த இரண்டு மட்டுமே இப்போதைக்கு குற்றவாளிகளை அச்சுறுத்துகிற ஆயுதமாக இருக்கிறது .அதையும் வேண்டாம் என்று சொல்வது எனக்கு அபத்தமாகவே படுகிறது .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக