ஞாயிறு, 2 மே, 2010
ஜன்னலில் சொட்டும் இரத்தம்
காகங்களால்
துரத்தப்பட்டு வந்த குயிலொன்று
என் வீட்டு ஜன்னலின்
இடைவெளி சிறுத்த கம்பிகளுக்கிடையில்
முட்டி மோதி படபடத்தது
நானும் துரத்தினேன்.
மறு நாள் விடியலில்
தெரு முனையில் கிடந்தது
கூரிய அலகுகளால்
கொத்தி கிழிக்கப்பட்ட உடல்
ஆண்டாண்டுகளாய்
ஜன்னல் கம்பியில்
துடி துடித்துக்கொண்டிருக்கிறது
அடிவயிற்று
மெல்லிறகு...
நள்ளிரவில்
சுவர் கீறிக் கசிகிறது
அதன் பாடல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
நல்லா இருக்குங்க.
கருத்துரையிடுக